Saturday, January 26, 2013

பாலியல் வன்கொடுமையின் ஊற்றுக்கண் எது?

டெல்லி பாலியல் வன்கொடுமையும் அதையொட்டிய வாதப் பிரதிவாதங்களும் இன்னும் ஓயாத நிலையிலும் பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகள் தொடர்கின்றன. நாளேடுகளையும் மற்ற பிற ஊடகங்களையும் பார்க்கும் போது மனித குல வரலாற்றில் இந்நூற்றாண்டுதான் மிகக் கொடிய காட்டுமிராண்டிகளின் காலமாக இருக்குமோ என்கிற அளவுக்கு கேள்விக்கே இடமில்லை என்கிற வகையில் நிமிடந்தோறும்  பாலியல் வன்கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. 

வேத காலந்தொட்டு இன்றைய இணையதள காலம் வரை பெண்களைப் போகப் பொருளாக சித்தரிப்பதில் வடிவங்கள்தான் மாறுபட்டனவேயொழிய தன்மை என்னவோ ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன-இருக்கினறன.

சமீபத்தில் முகநூலில் ஒரு முகவரால் பகிரப்பட்ட படமும் கவிதையும்.

கெஞ்சினேன் வஞ்சியை நெஞ்சிலே கொஞ்சிட !
எச்சமே இல்லையே மிச்சமே வைத்திட !
வஞ்சினால் நெஞ்சையும் பஞ்சனை மறைத்திட ! 
தத்தையோ மெத்தையில் முத்தமே பித்தமாய் !
சத்தமே இல்லையே முத்தமும் பகிர்ந்திட !
கட்டிலும் வீணடி கட்டுடல் கண்டிட !
நாணமும் எப்படி தொட்டிடை இழுத்திட ! 
உன்னிடை நூலடி மன்னவன் படர்ந்திட !
செய்வதும் என்னடி இரவினை நீட்டிட ?
கண்ணமும் முத்தமும் கலந்தே இருந்திட !
வெட்கமும் வேகமும் பிணைந்தே மலர்ந்திட ! 
தொடர்ந்திட அனத்திட இனிமையும் வளர்ந்திட ! 
"
தொடர்வோம்" என்றாள் தொல்லை விரும்பி 
"
மலர்ந்தேன் உனக்காய் வாழ்வின் முட்டும்


இக்கவிதையும் படமும் எத்தகைய எண்ணத்தை வாசகனிடம் ஏற்படுத்தும்?

ஆண்களின் இச்சையை தீர்ப்பதற்காகத்தான் பெண்கள் படைக்கப்பட்டுள்ளார்கள் என்கிற வலுவான கருத்தை வலியுறுத்தியது இந்து மதம். அதற்காகவே கோவில்களில் தேவதாசிகளை (விலை மாதர்களை) நியமித்தார்கள். தேவதாசிகள் கோவில் குருக்களின் இச்சையை தீர்ப்பதற்காக  பொட்டுக்கட்டி விடப்பட்டார்களா அல்லது ஊர் நாட்டாமைகளின் காமத்தை தீர்ப்பதற்காகவா என்கிற ஆய்வுக்கு செல்வது இங்கு நமது நோக்கமில்லை என்றாலும் பெண்ணானவள் ஆணுக்கு சுகத்தைத் தருபவள் என்கிற பெண்ணடிமைக் கருத்தை வலுவாக தோற்றுவித்தது தேவதாசி முறை என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. தேவதாசிப் பெண்ணுக்கு பாலியல் உறவில் ஈடபட விருப்பம் இல்லை என்றாலும் அவள் ஆண்களை மகிழ்வித்தாக வேண்டும். தன் ஆயுள் முழுக்க தேவதாசிப் பெண்கள் ஆண்களால் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் பாலியல் விருப்பம் இருக்கக் கூடாதா? பெண்களின் பாலியல் விருப்பத்தை - இச்சையை  தீர்த்துக் கொள்ள ஆண்களையும் பொட்டுக்கட்டிவிடுவது போன்ற எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்பதிலிருந்து பெண்களை மட்டுமே போகப் பொருளாக சித்தரித்துள்ளார்கள் என்பதை  நாம்  புரிந்து கொள்ள வேண்டும்.

(தேவதாசிகளே நாட்டியக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஒடிசாவைச் சேர்ந்த ஒரு தேவதாசி மூதாட்டி)

இவை மட்டுமல்ல பரதம் உள்ளிட்ட நாட்டியங்களை பெண்களுக்காவே உருவாக்கி கோவில்களில் ஆடவிட்டு இரசிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். இதையே இந்து மதத்தின் ஒரு பண்பாடாகவும் வளர்த்தெடுத்துள்ளார்கள். சில சமயங்களில் ஆண்களையும் பரதம் ஆடவிட்டாலும் பரத நாட்டியம் என்னவோ பெண்களை மையமாகக் கொண்டுதான் இன்றும் ஆடப்பட்டு வருகிறது.

இப்படி ஆலயங்களை மையமாகக் கொண்டுதான் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் கருத்துருவாக்கம் இந்து மதத்தின் மூலம் வளர்க்கப்பட்டுள்ளது. புராணக் கதைகளும், பண்டைய இலக்கியங்களும், நமக்கு சொல்லப்பட்ட சரித்திரக் கதைகளும் இதைத்தான் வலியுறுத்தி வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றைய திரைப்படங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும், வலைதளங்களும் பாலியல் வக்கிரத்தை ஒரு வெறியோடு  வளர்த்து வருகின்றன. 

அதே வேளையில்  ஆன்மீகம் பேசும் முற்றும் துணிந்த முனிகள் அரங்கேற்றும் காம லீலைகளையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

நித்தியானந்தா - காஞ்சிப் பெரியவாள் போன்ற முனிகளின் காமச்செயல்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் தமிழகம் அறிந்த ஒன்றுதானே! இவர்களின் காமச்செயல்கள் சாமான்யனின் மனதில் பெண்கள் மீதான காம இச்சையை உண்டுபண்ணவில்லை என்று மறுக்க முடியுமா? இத்தகைய முனிகளின் நுனிகளை வெட்டியிருந்தால்கூட அது சமூகத்தில் ஒரு எச்சரிக்கை மணியை எழுப்பி இருக்கும். என்ன செய்ய? ஆன்மீகம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய நவீன காலம்வரை ஆன்மீகவாதிகளின் கோவணங்கள்தானே  அரசியலையும் தீர்மானிக்கின்றன. கோவணமே கட்டாத சாமிகளின் நுனிகளைத் தொட்டு ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் நிறைந்த இந்தியாவில் இதுவெல்லாம் 'சகஜமப்பா' என்றல்லவா கருத வைக்கிறது.
   


அரசமரத்தடி சாமி அரசல் பரசலாகச் செய்வதை ஐந்து நட்சத்திர விடுதிகளில் (மடாலயங்களில்) கமுக்கமாக முடிக்கிறான் கார்பரேட் சாமி.


(விவோகானந்தர் பற்றி பலவற்றில் எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் நித்தியானந்தாவை வெளிச்சம் போட்டுக் காட்டவே இதைப் பயன்படுத்தியுள்ளேன்)

பெண்களை போகப் பொருளாக பார்க்கும் கருத்துருவாக்கம் தொடங்கிய இடத்திலிருந்துதான் பாலியல் வக்கிரங்களுக்கு முடிவு கட்டுகின்ற போராட்டமும் தொடங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment