Saturday, February 9, 2013

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? (மீள்பதிவு)

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 முதல் 60 நாட்கள் என்கிற அளவிலேயே திருமண நாட்களை பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் வரையறுக்கிறார்கள். இந்த ஆண்டு 55 நாட்கள் மட்டுமே முகூர்த்த நாட்கள் என் ஒரு நாட்காட்டியில் கொடுத்துள்ளார்கள். புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வந்தாலும் பெருகி வரும் மக்கள் தொகை - அதற்கேற்ப அதிகரித்து வரும் திருமணங்களை நடத்துவதற்கு மண்டபம் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. முகூர்த்த நாட்கள் குறித்து  நவம்பர் 2010 ல் வெளியான கட்டுரையின் மீள் பதிவு இது.

*****
சென்ற வாரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலகீனமடைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டதுஆனாலும் தமிழகத்தில் மழை ஓய்ந்த பாடில்லை.

19.11.2010 அன்று நண்பர் ஒருவரின் மகள் திருமணம்முதல் நாள் நிகழ்ச்சியான மாலை நேர மணமக்கள் வரவேற்பில் கலந்து கொள்ள பயணத்திற்காக ஆயத்தமானேன்மண்டபமோ இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம்தான்இருசக்கர வாகனத்தில் சென்றால் விரைவில் வீடு திரும்பலாம்ஆனால் மாலையில் பெய்த கன மழையும்கீழ்வானில் பிரளயமாய் திரண்ட கரு மேகங்களும் என்னை மிரள வைத்தனபேருந்தில் பயணிப்பது என முடிவாகி மாலை ஆறு மணிக்கு நகரப் பேருந்தில் ஏறினேன்.

கூட்டம் நிரம்பி வழிந்ததுஒருவழியாய் ஒரு ஓரத்தில் நிற்க இடம் கிடைத்ததுஅரசுப் பேருந்தாயிற்றேமிதிவண்டிக்காரனும் 'ஓவர்டேக்செய்தது ஆமை - முயல் கதையை நினைவு படுத்தியதுஒருவழியாய் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒருமணி நேரம் பிடித்தது.  

கனிசமானோர் இறங்கி விட்டதால் கடைசி இருக்கையில் உட்கார இடம் கிடைத்ததுவலது பக்கம் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன்அவரும் ஏதோ ஒரு திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை சோளக் கொல்லை பொம்மையாய் அவர் சுத்தியிருந்த பட்டுச் சேலை எடுத்துச் சொன்னதுஇடது பக்கம் உட்கார்ந்திருந்த நடுத்தர வர்க்க நடுவயதுக்காரரும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை அவர் கட்டியிருந்த கரை வேட்டி உணர்த்தியதுவிசாரித்ததில் அவரும் நான் செல்லும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

கடுமையான போக்குவரத்து நெரிசல்பேருந்துகளை பாதசாரிகள் கடந்து சென்றார்கள்காரணம் பலருக்குப் புரியவில்லைபட்டுச் சேலை பள பளக்க நடுத்தர வர்க்கப் பெண்களை சுமந்து சென்ற தானிகளும் (ஆட்டோக்கள்இருசக்கர வாகனங்களும் சந்து பொந்துகளில் நுழைந்து சற்றே முன்னேறின.
எங்கள் மூவருக்கோ படபடக்க ஆரம்பித்து விட்டதுஎப்போது திரும்புவது என்றுநான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தையடைய மேலும் ஒருமணி நேரம் ஆயிற்றுபிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த திருமண மண்டபத்தை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்தேன்ஆக இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எனக்கு இரண்டரை மணி நேரம் ஆயிற்று.

அவசர அவசரமாய் விருந்தை முடித்துஅன்பளிப்பாய் இரண்டு நூல்களை மணமக்கள் கையில் திணித்து விட்டு ஒரு வழியாய் கடைசிப் பேருந்தைப் பிடித்து இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்நிம்மதிப் பெரு மூச்சு.

முகூர்த்த நாளில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதையும் போக்கவரத்து நெரிசல் ஏற்படுவதையும் பெரும்பாலும் மக்கள் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள்அனால்இதுவே மாநாடுகள்பேரணிகள் என்றால் அது விலைவாசி உயர்வை எதிர்த்ததாய் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்காக திட்டித் தீர்ப்பார்கள்.

முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமாமாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம்சிலருக்கோ கொண்டாட்டம்.

முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி,  காய்கறிக்கு கிராக்கிபாலுக்கு கிராக்கிமல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கிஇசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கிமேடை ஜோடனைக் காரருக்கு கிராக்கிசமையல் காரருக்கு கிராக்கி,  எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறதுபுதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம்  படுகிராக்கியாகிவிடும்.

ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு கிராக்கிக்கு மத்தியிலும் முழம் முப்பது ரூபாயானாலும் மலர்கள் இல்லாமல்பெண்கள் மண்டபம் செல்லமாட்டார்கள் . மண்டபம் நடந்து செல்லும் தூரமே என்றாலும் சொந்தமாகக் கார் இருந்தால் காரிலும்இல்லை என்றால் காசானாலும் பரவாயில்லை என ஆட்டோவிலும் சென்று தங்கள் கௌரவத்தை நிலை நாட்டுவோரும் உண்டு.

இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்முகூர்த்த நாள் பஞ்சம்தானேஇந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறதுஆடியிலும்மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாதுஇந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டிகிடையாதுவேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம்அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில்தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாதுகாலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.


பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாதுஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறதுஎனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.

ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும்பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை அதிகரிக்காதா என்ன?

முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும்நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாதுஅவ்வாறு செய்தால் என்னவாகும்?

கட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம்?  உழைத்துக் கொட்டவும்வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம்மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்ட காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.

ஆனால் இயற்கை விதிகளின் படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும்விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும்இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாதுமனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறிய திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.

குடும்ப வாழ்வில்பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்திஇது போன்று நாள்-நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும்அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும்உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானேஇந்தக் கூட்டம்சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லைவரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானாகையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லைசட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.

ஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லைஇவற்றை  மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லைஇருந்தும்முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானாமுகூர்த்த நேரத்தை மீறுகிறானாஅது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.

பார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள்-முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும்நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவாபஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றனபாலியல் உறவு கொள்கின்றனபிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள்-நேரம் குறிக்க வேண்டும்முகூர்த்தமல்லாத நாளிலும்நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்?