Saturday, February 21, 2015

அருந்ததியர் முதல் பார்ப்பனர் வரை: வளரும் காதல்

பறையர்+செட்டியார்
பறையர்+முதலியார்
பார்ப்பனர்+பறையர்
பறையர்+நாடார்
முத்தரையர்+முதலியார்
நாயுடு+அருந்ததியர்
நாயுடு+பறையர்
முதலியார்+மீனவர்(பர்வதராஜகுலம்)
பறையர்+செட்டியார்
வன்னியர்+நாயுடு
வெள்ளாளக்கவுண்டர்+யாதவர்
முதலியார்+பார்ப்பனர்
பிள்ளை+கள்ளர்
நாயுடு+பறையர்
வெள்ளாளக்கவுண்டர்+வன்னியர்
வன்னியர்+பார்ப்பனர்
இஸ்லாமியர்+பறையர்

(ர்-விகுதி:காதல் மறியாதைக்காக; சாதி மறியாதைக்காக அல்ல)

இப்படி நீள்கின்றன கடந்த சில ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட இணைகளின் பட்டியல். பெரும்பாலும் இவர்களின் திருமண விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

மேற்கண்ட இணைப்பட்டியலில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகள் பெண்களைக் குறிக்கும். எ.கா: நாயுடு(பெண்)+பறையர்(ஆண்)

இந்த இணைகள் எல்லாம் நடுத்தர வர்க்க இணைகள். பெரும்பாலும் இவர்கள் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

முதலில் இருதரப்பிலும் காதல் இணைகளை பிரிக்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் காதலர்கள் உறுதி குலையாமல் இருந்ததால் முறைப்படி பெற்றோர்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இணைகள் தற்போது ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் ஆகிவிட்டனர். இதுவரை எந்த இணையும் பிரிந்ததில்லை. பெற்றோர்கள், உறவினர்களிடமிருந்து இழிசொற்கள்-பழிசொற்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் துச்சமென தூக்கி எறிவதோடு இழிப்போரையும்–பழிப்போரையும் இடித்துரைத்து வெற்றி காண்கின்றனர்.

சாதி வெறியர்கள் தொடர்ந்து காதலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினாலும், இந்து மதவெறியர்கள் சாதித்தூய்மையைப் பாதுகாத்திட கழுதையாய்க் கத்தினாலும் காதல் மணம் புரிவோர் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகின்றன. இன்றுகூட பறையர்+முதலியார் இணை மணவிழா அழைப்பிதழ் ஒன்று எனக்கு வந்தது.

சமூகத்தின் எதார்த்தமாக காதல் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழலில் காதலே இல்லாத சமூகம் சாத்தியமா? சாத்தியமென்றால் அச்சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடர்புடைய பதிவுகள்:

4 comments:

  1. குலநாசம் ஓங்கட்டும்!
    காதலற்ற உலகை நோக்கி.

    ReplyDelete
  2. பறையர் + வன்னியர்
    அருந்ததியர் + வெள்ளாள கவுண்டர்
    மள்ளர் + தேவர்
    இணைகள் பெருகுவதாக...!!!

    ReplyDelete