Monday, February 23, 2015

நேற்று வரை காதலையே காதலித்தாய்! இன்று மட்டும் காதல் கசப்பதேன்?

காதல் இல்லை என்றால் ……. 
ஆட்டனத்தி – ஆதிமந்தி இல்லை
ரோமியோ - ஜுலியட் இல்லை
சகுந்தலை - துஷ்யந்தன் இல்லை
லைலா - மஜ்னூ இல்லை
மும்தாஜ் - ஷாஜஹான் இல்லை
கிளியோபட்ரா - மார்க் அண்டனி இல்லை
அம்பிகாபதி - அமராவதி இல்லை
தேவதாஸ் - பார்வதி இல்லை
உதயணன் - வாசவதத்தை இல்லை
மாதவி - கோவலன் இல்லை
சிலம்பில்லை - சிலப்பதிகாரமில்லை
வள்ளி இல்லை - முருகன் இல்லை
காதற் சிறப்புரைக்கும் 133-ஆம் அதிகாரம் இல்லை
இலக்கியங்கள் இல்லை - காவியங்கள் இல்லை!

காதல் இல்லை என்றால் ……. 
போரில்லை - வீரமில்லை
கதைகள் இல்லை - நாடகங்கள் இல்லை
நாவல் இல்லை - கவிதை இல்லை
ஓவியம் இல்லை – சிற்பமில்லை
குயில் இல்லை – ஓசை இல்லை
பாடல் இல்லை - இசை இல்லை
ஆட்டமில்லை - பாட்டமில்லை!

காதல் இல்லை என்றால் ……. 
விசுவநாதன் - ராமமூர்த்தி இல்லை
அடிமைப் பெண்ணும் - ஆயிரத்தில் ஒருவனும் இல்லை
ஸ்ரீதர் இல்லை – காதல் சினிமா இல்லை
சாம்பார் இல்லை – சாவித்திரி இல்லை
சிவாஜி இல்லை – பத்மினி இல்லை
எம்.ஜி.ஆர் இல்லை – சரோஜாதேவி இல்லை!

காதல் இல்லை என்றால் ……. 
பாலசந்தரும் – அவள் ஒரு தொடர் கதையும் இல்லை
பாரதிராஜாவும் - பதினாறு வயதும் இல்லை
மயிலுமில்லை - ஆவாரம் பூவுமில்லை
வைரமுத்து - வாலி இல்லை
இசையும் - இசைஞானியும் இல்லை
‘நானொரு சிந்து! காவடிச் சிந்து!’ ராகம் ஏதுமில்லை
சிவகுமாரைத் தேடும் அன்னக்கிளி இல்லை
கமல் இல்லை – வாழ்வே மாயமில்லை
கார்த்திக் - ராதா இல்லை; கடலின் அலைகள் இல்லை
மோகன் இல்லை - அருக்கானி இல்லை
சினிமா இல்லை - சின்னத்திரை இல்லை!

காதல் இல்லை என்றால் ……. 
'எவர் கிரீன்' 80 இல்லை
'சன் டி.வி' - 'விஜய் டி.வி' இல்லை
மான் இல்லை – மயில் இல்லை
கலா 'மாஸ்டர்' – 'கெமிஸ்ட்ரி' இல்லை

காதல் இல்லை என்றால் ……. 
வானம் இல்லை - மேகமில்லை
நிலவில்லை - குளிரில்லை
மலை இல்லை - நதி இல்லை
மலர் இல்லை - வாசமில்லை
தேனில்லை – வண்டில்லை
தென்றலில்லை - மூச்சுக் காற்றின் பரிசமில்லை
மொத்தத்தில்-
ஊன் இல்லை - உயிரில்லை
நீ இல்லை - நான் இல்லை
ஏன்! இவ்வையகமே இல்லை!

காதல் உனக்கு கசப்பதேன்?
மேலே பார்!
நேற்று வரை 
காதலையே காதலித்தாய்.
இன்று மட்டும் காதல் உனக்கு கசப்பதேன்?

இந்து முன்னணியும் – அர்ஜூன் சம்பத்தும்
ஈஸ்வரன்களும் - ராமதாசன்களும் 
கழுதைப் புலிகளும் - நாய்களும்  
காதல் சமுத்திரத்தில் சாதி வெறி நஞ்சைக் கலப்பதாலா?

எழு கடலிலும் ஆழ்கடலிலும் தேடு!

சிங்கிகளும் - வஞ்ஜிரங்களும்
வவ்வாவும் - சீலாவும்
இறாலும் - சுறாவும்
திருக்கையும் - சங்கராவும்
மத்தியும் - நெத்திலியும்
வாலையும் - கோலாவும்
பாறையும் - சூறையும்
கனவாயும் - கொடுவாயும் 
என
ஏறாளமாய் இருக்க-

அயிரைகள் குரவைகளுக்காக 
சேறு-சகதிகளில் புரண்டது போதும்
குட்டைகளையும் கு'ல'ங்களையும் விட்டேறு!

தொடர்புடைய பதிவுகள்:

அருந்ததியர் முதல் பார்ப்பனர் வரை: வளரும் காதல்

செவ்வாய் கிரகமும் சாதித் தூய்மையும்!

குலநாசம் ஓங்கட்டும்!

காதலற்ற உலகை நோக்கி.....!

No comments:

Post a Comment