Friday, March 27, 2015

கிரிக்கெட்: உலகக் கோப்பையும் இந்தியனின் மனநிலையும்!

இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே!

இவ்வாறு சென்ற உலகக் கோப்பையின் போது எழுதியிருந்தேன். இந்த உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதியில் தோற்று விட்டது. இந்தச் சூழலில் இந்தியனின் மன நிலையை மேலும் அறிய...

துன்பக் கடலில் துவளும் இந்தியா! 


தொடர்புடைய பதிவுகள்:

Sunday, March 22, 2015

கடவுள் ஒரு செங்கிஸ்கான்-வீழ்த்துங்கள் அவனை!

”நான் நாத்திகம் பேசுவதற்கு காரணம் என்னுடைய ஆணவமா? அகந்தையா?

எனது பாட்டனாரும் எனது தந்தையும் பக்திமான்களாக இருந்தும் எனது பள்ளிப் படிப்பின் போது காலையும் மாலையும் காயத்ரி மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்து சிறு வயதில் பக்தனாக இருந்த நான் எப்படி நாத்திகன் ஆனேன்?

ஒரு வழக்கு தொடர்பாக நான் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது அவ்வழக்கில் எனக்கு தூக்கு தண்டனைகூட விதிக்கப்படலாம் என்ற நிலையில் இரண்டு வேலையும் கடவுளை வணங்கச் சொல்லி காவலர்கள்  என்னைத் தூண்டிய போதும் மிகவும் இக்கட்டான நிலையிலும் நான் தொடர்ந்து நாத்திகனாகவே  இருக்க முடிந்ததேன்?

மதங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான் எனில் அவைகளுக்குள் வேறுபாடுகள் ஏன்? இந்து மதத்திற்குள்ளாகவே ஆரிய சமாஜம், சனாதன தர்மம் என பிரிவுகள் ஏன்?

துன்பமும் துயரமும் சதா நடந்து கொண்டிருக்கும் போது கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் எனில் இதை எல்லாம் போக்காமல் ஒரு நீரோ மன்னனைப் போல - ஒரு செங்கிஸ்கானைப் போல அவன் நடந்து கொள்வதேன்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் கடவுளிடம் இருக்கும் போது எதற்காக கடவுள் மக்களைப் படைத்தான்?

சாதித் திமிர்கொண்ட மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை தீண்டத் தகாதவனாக நடத்துவதற்கும், மமதையும் பேராசையும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கொண்ட ‘குதிக்கும்’ பார்ப்பனர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும் தாழ்த்த்தப்பட்ட மக்களின்  தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய பரிசுத்த ஞான நூற்களாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும் அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்?”

இப்படி கடவுள் மதம் குறித்து பகத்சிங் சரமாரியான கேள்விக் கணைகளைத் தொடுத்து “கற்றுணர் - எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும், கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்” என்கிற உணர்ச்சிகள் தன்னுடைய மனதின் வாசற்படியில் கடல் அலைகளைப் போன்று கிளம்பி தாவித்தாவி முட்டி மோதி விசயங்களை கற்றுணர ஆராய்ந்தறியத் தொடங்கியதின் விளைவாக அவரிடம் பெறும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் ஒரு நாத்திகன் ஆனார்.

புதியவற்றைக் கற்றுணர்வதற்கு பகத்சிங் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!

மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரின்  நினைவு நாள்.


சுகதேவ் - பகத்சிங் - ராஜகுரு
மேலும் படிக்க:

1.நான் நாத்திகன் ஏன்?
தமிழில் பா.ஜீவானந்தம்.
வெளியீடு கீழைக்காற்று வெளியீட்டகம். 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002. தொ.பே எண் 044-28412367
விலை: ரூ15/=

2.The Daring Youth of India : BAGATH SINGH. by: Col.Raghvinder Singh.
Published by: VIJAY GOEL, S-16, Naveen Shahdara, Delhi-110032 Phone: 22324833 e-mail: goelbooks@rediffmail.com
விலை: ரூ75/=

மேலும் பார்க்க:
The Legend of Bhagat Singh (2002) - Hindi Movie

https://www.youtube.com/watch?v=x-Zz6nobDik


Tuesday, March 17, 2015

காந்திக்கு அரோகரா! அரை டிரவுசர்களால் ‘லோல்படும்’ இந்தியா! - 3

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலோ போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

முந்தைய தொடர்ச்சி... 

54. துரியோதனின் தம்பிகள் பிறந்தது ஸ்டெம் தெராபி தொழில் நுட்பத்தால் – நோபல் அப்போது பிறந்திருக்கவில்லை. பிறந்திருந்திருந்தால் ஸ்டெம் தெராபி விஞ்ஞானியையாவது படித்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டோமே!

55. விநாயகர் - ஆண் உடலையும் யானைத் தலையையும் இணைத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிறந்தவராம்: இங்கேயும் ஒரு விஞ்ஞானியை மிஸ் பண்ணிட்டோமே!

56. இராமாயணத்தில் புட்பக விமானம் ஓடியதாம் – ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தியவன் எவனோ! அவனை அடையாளம் காட்டினால் புண்ணியமாகப் போகும். என் ‘அப்பாச்சி’க்கு ஒரு நட்டு தேவைப்படுது!

57. இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்: அப்பதானே சீமந்தமும், தொட்டிலாட்டுதலும், பெயர் குறித்து சூட்டுதலும், கல்யாணம் பண்ணவும், கருமாதி பண்ணவும், இன்ன பிற இத்தியாதி இத்தியாதி சடங்குகள் பெருகும். தட்டில் தட்சணைகள் கூடுமல்லவா!

58. நிர்பயா பற்றிய ஆவணப் படத்திற்குத் தடை – துரௌபதையை துகிலுரித்துக் கொண்டே அவளுக்கு கோவில் கட்டிய கதையாகவல்லவா இருக்கு! கௌரவமான துரியாதனர்களை அறியாதவர் உண்டோ!

59. எழுத்தாளர்கள் பெருமாள் முருகன் மற்றும் புலியூர் முருகேசன் மீது தாக்குதல் - சாதிப்பெருமை காத்தால்தானே இந்துப் பெருமையை காக்க முடியும்.

60. தாலி வேண்டுமா? வேண்டாமா? விவாதம்: புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்,  தாலி பற்றிய விவாதத்தை நடத்தக்கூடாது என இந்து மக்கள் கட்சியினர் மிரட்டல்  மற்றும் அலுவலகத்தின் மீது இந்து இளைஞர் சேனாவினர் குண்டு வீசித் தாக்குதல். தாலி போனால் அவன் சோலியோ காலி. சும்மா இருப்பானா?

61. மகாராஷ்டிரா அரசு மாட்டிறைச்சிக்குத் தடை. அரியானாவிலும் இதே தடை. அவன் ஐந்து ஆண்டு சிறை என்றான். இவனோ மாட்டைக் கொல்வது கொலைக்குற்றம் என்கிறான். சிறையோ பத்தாண்டுகள் என்கிறான். மவனே! மாடு வளர்த்தே, உன் கதி அதோ கதிதான். தானா செத்தாலும் காக்கத் தவறிய குற்றத்திற்காக உன் மீது 302. (அதனால்தான் அம்மா ஆடு கொடுக்குறாங்களோ! என்னே கரிசனம் உன்னைக் காக்க! என்ன இருந்தாலும் அம்மா அம்மா தாண்டா!) ஆனால் தப்பிக்க ஒரே வழிதான் உண்டு மகனே! அதுதான் பிராயச்சித்தம் என்கிற பரிகாரம். பழைமையான சாஸ்திர விதிப்படி மந்திரஞ்சொல்லி பசு கொல்லப்பட்டிருந்தால் அதை புசிக்கலாம்; யாகத்திற்காக கொல்லப்பட்ட பசுக்கள் உயர்ந்த நிலையை அடைவதால் யாகம்  செய்து பசுவைக் கொன்றால் அது கொலை ஆகாது; (மனு: 5-36, 39, 40). என்ன! யாகம் செய்ய அய்யரைத் தேடனும். நாள் குறிக்கோனும். மந்திரம் சொல்லி யாகம் வளர்க்க கொஞ்சம் வராகன் செலவாகும். அவ்வளவுதான்.

62. மாட்டிறைச்சிக்கான தடையை இந்தியா முழுதும் அமுல்படுத்த மாநில அரசுகளுக்கு மிரட்டல். இனி மான்கறி கிடைத்தாலும் கிடைக்கலாம்; ஆனால் மாட்டுக்கறிக்கு வாய்ப்பே கிடையாது. எச்சரிக்கை: மாட்டுக்கு வயதாகி மண்டையைப் போட்டாலோ அல்லது நோயினால் மண்டையைப் போட்டாலோ மறவாமல் ‘டெத் சர்டிபிகேட்டை’ வாங்க மறவாதீர்கள். என்ன செய்ய? ‘டெத் சர்டிபிகேட்டுக்கு’ கொஞ்சம் செலவாகும்தான். இல்லை என்றால் கம்பி எண்ண வேண்டி வரும்!

63. மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை. வெறும் கட்டடம். எப்பொழுது வேண்டுமானாலும் இடிக்கலாம் - சு.சாமி, பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர்.

64. பிப்ரவரி 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது நான்கு கிருஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்.

65. அரியாணா மாநிலம் கைம்ரி கிராமத்தில் மார்ச் 14, 2015 ல் கிருஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல். 

66.இப்போதைக்கு கடைசிச் செய்தி: கோவா அரசின் விடுமுறை பொதுப்பட்டியலில் காந்தி ஜெயந்தி இடம் பெறவில்லை. தட்டச்சேற்றும் போது தவறிவிட்டதாக இப்பொழுது தாஜா பண்ணினாலும் இது ஒரு முன்னோட்டமே! காந்திக்கு அரோகரா!

பத்து மாத கால முன்னோட்டமே இப்படி எனில் இனி வரும் 50 மாத காலமும் இதே நிலை தொடருமேயானால் மேலை நாட்டுக்காரன் செவ்வாயில் குடியிருப்பான். நாமோ நாமக்கட்டிகளிடம் நாண்டுக்கிட்டு கிடப்போம்!

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

Monday, March 16, 2015

அரை டிரவுசர்களால் ‘லோல்படும்’ இந்தியா! - 2

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலோ போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

முந்தைய தொடர்ச்சி... 

28. வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் நூறு நாட்களில் இந்தியாவுக்கு மீட்பதில் அவசரப்பட முடியாது என பல்ட்டி – ஙொப்பன் குதிருக்குள் இல்லையாம்!

29. ஆதார் அட்டை அவசரம் – ஆள்காட்டி வேலையை சுலபமாக்க.

30. ரேசன் மான்யம் இரத்து – “அம்மா தாயே! கஞ்சிக்கு வந்திருக்கேம்மா!” என உடைந்த ஓட்டை எடுத்துக் கொண்டு போ. பழையதும் புளித்ததும் தாராளமாய் கிடைக்கும்.

31. சமையல் எரிவாயு மான்யம் – மான்யமும் தானமும் உனக்கில்லையப்பா. மனுவைக் கேள். யாருக்கு என்பதை அவன் சொல்லுவான்.

32. மளிகைக் கடைகளில் ஐந்து கிலோ எரி வாயு – அப்பதானே அதானிகள் கொழிக்க முடியும்.

33. பெட்ரோல் - டீசல் மான்யம் வெட்டு: காசு இருந்தால் வண்டி ஓட்டு. இல்லை என்றால் காயலாங்கடையைப் பாரு.

34. மண் எண்ணெய் வெட்டு – மண் எண்ணெய் இருந்தால் என்ன; இல்லாவிட்டால் என்ன? பஜனை செய்ய பூஜை விளக்கு எண்ணெய் இருந்தால் போதுமே! அவாள் வீட்டில் எப்பொழுதும் வெளிச்சம்தானே!

35. நூறு நாள் வேலைத் திட்டம் முடக்கம் – அம்மா இலவசமாகவே படி அளக்கும் போது இத்தாலிகாரிக்கு இங்கே என்ன வேலை!

36. ‘கிளீன் இந்தியா' – மடிப்பு கலையாத 10 லட்ச ரூபாய் கோட்டு மட்டும்தான கிளீனாகத் தெரியுது. மத்தபடி கூவம் நாத்தம் கோயம்புத்தூர் போனாலும் நம்ம கூடவே வருது.

37. ‘மேக் இன் இந்தியா' – மாமா வேலையின் மறுபெயரோ!

38. தொழில் நடத்துவது, சேவை செய்வது அரசின் வேலை அல்ல; நிர்வாகம் செய்வது மட்டுமே (குட் கவர்னன்ஸ் - good governance) அரசின் வேலையாக இருக்க வேண்டும் - உச்சிக் குடுமிகளின் உரத்த கூப்பாடு.

39. ரயில்வே துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வெளிநாட்டு தனியார் முதலீடு – அவாளுக்கு ஆர்டினரி கிளாஸ் அலுத்துப் போச்சாம். எ.சி கிளாஸ் இல்லாட்டி வேர்த்துக் கொட்டுதாம்!

40. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 26% லிருந்து 49% மாக அனுமதி – அமெரிக்கா போன அம்பிகள் கையில் டாலர்கள் குவிந்திருக்காம்!

41. கெயில் (GAIL), பெல் (BHEL) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை – எதுக்கடா ஒங்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு? ஆப்பு வெச்சுட்டோமில்ல!

42. எச்.எம்.டி. (HMT) நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று பொதுத்துறை ஆலைகள் உட்பட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை மூடப்படும். இதுதவிர ஏர் இந்தியா, எம்.டி.என்.எல். (MTNL) உட்பட 65 பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளதால் அவைகளுக்கும் விரைவில் மூடுவிழா நடத்தப்படும் – எதுக்கடா ஒங்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு? ஆப்பு வெச்சுட்டோமில்ல!

43. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் – பக்தியினால் வேலை செய்பவனுக்கும், தேவடியாள் மகனுக்கும், குலவழியாக தொழில் செய்பவனுக்கும் எதற்கு சட்ட பாதுகாப்பு? (மனு: 8-415).
44. தொழிற்சாலைகளில் ஆய்வு தேவையில்லை – ஆன்லைனே போதும்: ஆலை விபத்துகளில் செத்துப் போனவர்களை கணக்கெடுக்க மட்டும் நேரில் வந்தால் போதும்!

45. ஒப்பந்த மற்றும் பயிற்சிப் பணியாளர்களை வரைமுறையின்றி அமர்த்திக் கொள்ளலாம் – கடந்த முப்பது ஆண்டுகளாக டி.வி.எசும், சிம்சனும் செய்வதைத்தான் தற்போது எல்லோருக்குமானதாக விரிவு படுத்துகிறோம்!

46. இ.எஸ்.ஐ (ESI) மருத்துவக் கல்லூரிகள் மூடல் – சூத்திரன் மேலோருக்கு சேவை செய்ய வேண்டும் என விதி இருக்கும் போது சூத்திரனுக்கு எதற்கு மருத்துவச் சேவை?

47. திட்டக் குழு கலைப்பு – நிதி ஆயுக் உருவாக்கம்: குரங்குக் கையில் ஆப்பம்!

48. சுகாதாரத்திற்கு 6000 கோடி ரூபாய் குறைப்பு – இங்கே குறைத்தால்தானே அவர்கள் (தனியார் மருத்துவமனைகள்) கொழுக்க முடியும்.

49. அதானிக்கு கடன் கொடுக்க நான்கு வங்கிகளுக்கு அரசு உத்தரவு – ஆட்சிக்கட்டிலை பெற்றதற்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா!

50. கார்பரேட் நிறுவனங்களுக்கு 2.70 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை. இதுவும் நன்றிக் கடனுக்காகத்தான்!

51. விவசாயக் கடனுக்கு வட்டி அதிகரிப்பு – விவசாயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இதுதானே வழி.

52. நிலம் கையகப்படுத்தும் சட்டம்: நிலத்துக்காரன் அனுமதி தேவையில்லை. ”உழுதுண்டு வாழவாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்றான் ஐயன் வள்ளுவன். 

“பயிரிடுதல் இம்சையான தொழில், கீழான தொழில், சிலர் வேண்டுமானால் பயிரிடுதல் சிறந்ததென்று சொல்லலாம், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூழியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுவதால் பயிர்த் தொழிலை பெரியோர்கள் (பார்ப்னர்கள்தானே அன்றைய பெரியோர்கள்) நிந்திப்பதால் பிராமணர்கள் இத்தொழிலை ஒருபோதும் செய்யக்கூடாது; போஜனத்துக்கு வேறு வழி இல்லை என்றால்தான் பிராமணர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடலாம். அதுவும் அந்நியனைக் கொண்டுதான் செய்ய வேண்டும். நேரடியாக பார்ப்பனர்கள் பயிர்த் தொழிலில் ஈடுபடக்கூடாது” என்றான் மற்றொரு அய்யன். (மனு: 10-83, 84). 

அதனால்தானோ என்னவோ “கண்டதுண்டா! கண்டதுண்டா! ஏர் ஓட்டும் பார்ப்பானைக் கண்டதுண்டா? களை பறிக்கும் பாப்பாத்தியைக் கண்டதுண்டா!” என அன்று பெரியார் தொண்டர்கள் முழங்கினார்களோ! உன் தொழிலையே மதிக்காதவன் உன்னையா மதிக்கப் போறான்!

53. கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்குவது – பாமரனின் பானைகளை உடைக்காமல் விடமாட்டான் போலிருக்கே!

தொடரும்......

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

Saturday, March 14, 2015

அரை டிரவுசர்களால் 'லோல்'படும் இந்தியா! - 1

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலே போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
  1. காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தன்
  2. கோட்சேவுக்கு கோவில்
  3. காந்தியைக் கொன்ற டிசம்பர் 30 ல் கோட்சேவின் திரைப்படம் வெளியீடு
  4. காந்தி பிறந்த நாளில் குப்பை கூட்டுதல் – காந்தியைப் பெருமைப்படுத்தவா?
  5. இந்தியாவை இராமணின் பிள்ளைகள் ஆள வேண்டுமா? இல்லை முறைகேடாகப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா?
  6. பகவத் கீதை தேசிய நூலாக்கப்படும் – பிறப்பால் ஏற்றத்தாழ்வை பாதுகாக்கவா?
  7. அடுத்த கல்வி ஆண்டு (2015-16) முதல் 5ம் வகுப்பிலிருந்து பகவத் கீதை – அரியானா அரசு
  8. கிருஸ்துமஸ் தினத்தில் வாஜ்வாய்க்கு பிறந்தநாள் விழா - பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் – பரிசுகள்: ஏசு பிறந்த நாளை மறக்கடிக்கவா?
  9. இந்திராகாந்தி பிறந்த நாளில் – கக்கூஸ் கட்டுதல்: காங்கிரசை பெருமைப்படுத்தவா?
  10. வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது – இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள்?
  11. சமஸ்கிருத வாரம் – பிணத்திற்கு உயிரூட்டும் முயற்சி – உயிரோடு இருக்கும் பிற தேசிய இன மொழிகளை புதை குழிக்கு அனுப்பவா?
  12. சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் – குருநாதனுக்கே ஆப்பு எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்?
  13. அரசுசார் நிறுவனங்கள்: சமூக வலைதலங்களில் இந்திப் பயன்பாடு: இந்தி மட்டும் தெரிந்தவன் ஏற்கனவே பானி பூரி விக்கிறான். மற்ற மொழிக்காரனெல்லாம் அவன் கடையில் டம்ளர் கழுவலாம்?
  14. நதிகளும், நகரங்களும் புனிதமாக்கப்படும்: புனிதம் பேசினால்தானே தட்டிலே தட்சணை விழும்.
  15. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களை  இந்து மதத்திற்கு மாற்றும் - வீடு திரும்பல் (கர்வாப்சி): அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆன அம்பிகளையும் இந்தியாவிற்கு கர்வாப்சி செய்தால் பாரத தேஷம் ஷேமமாக இருக்கும்.
  16. மதமாற்ற தடைச்சட்டம் – குறிப்பாக இந்துக்கள் பிற மதங்களுக்கு மாறுவதைத் தடுக்க: விழுகின்ற தட்சணை குறையக் கூடாதல்லவா?
  17. இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள்தான். சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது. அம்பிகளைத் தவிர வேறு யாருமே சிறுபான்மையினர் அல்ல.
  18. கச்சத் தீவு - தமிழக மீனவர் பிரச்சனை – மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என பா.ஜ.க வினர் பேச்சு – செயற்கைக் கோள் உதவியுடன் கம்ப்யூட்டரிலேயே மீன் செல்லும் பாதையைக் கண்டறிந்து சிலோன்காரன் கடலில் ஒரு கல்லை தூக்கிப் போட்டு மீன்களை இந்தப்பக்கமாக அச்சமூட்டி வரவைத்து மீன்களை அள்ளிக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்தவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
  19. காவிரி நீர் / முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு தீர்வு கேட்டால் நதிகள் தேசிய மயம் என போகாத ஊருக்கு வழி சொல்லுதல்; இல்லை எனில் மௌனம் சாதித்தல்
  20. ராஜபக்சே வெற்றி பெற மோடி வாழ்த்து – பங்காளிகளுக்குள் இதெல்லாம் சகஜமப்பா!
  21. திருக்குறளுக்கு வட இந்தியாவில் விழா – வள்ளுவனையும் மனுவின் மற்றொரு அவதாரமாக்கவா?
  22. மனுதர்மத்தை நிலைநாட்டிய ராஜ ராஜ சோழனுக்கு 1000 மாவது சதய விழா:  உச்சிக் குடுமிகளை வாழவைத்தவனாயிற்றே!
  23. நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி – நிதி ஒதுக்கீடு: அமெரிக்காவுக்கு அடிவருட.
  24. கூடங்குளம் விரிவாக்கம் – அந்நியனின் அணுக் கழிவுகளை நம் தலையில் கொட்டத்தான்!
  25. அணு ஒப்பந்தம் - அமெரிக்கா நிவாரணம் தராது
  26. மீத்தேன் வாயு எடுக்க அனுமதி – கும்பகோணமே கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்த பிறகு தஞ்சையாவது! நஞ்சையாவது!
  27. அம்மா வழக்கு: மேல்முறையீடு - விரைந்து முடிக்க முனைதல்: முக்கிப் பார்த்தார்கள். பரிவாரங்களுக்கு ஸ்ரீரங்கன் கொடுத்ததோ ஆட்டுப் பீக்கைதான். ஆட்டுப் பீக்கை எப்ப விட்டையாவது. இப்போதைக்கு கோமாதாவின் கோமியமே போதும் என நினைத்ததாலோ!
தொடரும்......

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

Wednesday, March 11, 2015

மகாராஷ்டிர அரசும் மாட்டிறைச்சிக்குத் தடையும்!

"உயர் சாதிக்காரன் கீழ்சாதிக்காரர்களை வதைக்கிறான். பணக்காரன் ஏழைகளை வதைக்கிறான். முதலாளி தொழிலாளியை வதைக்கிறான். மாமியார் மருமகளை வதைக்கிறாள். காவல் துறை மக்களை வதைக்கிறது. ஜெயா அரசு மக்கள் நலப் பணியாளர்களை வதைக்கிறது. ஆப்கானை வதைத்து ஈராக்கை வதைத்து-லிபியாவை-வதைத்து தற்போது ஈரானை வதைக்கத் திட்டம் போட்டு வருகிறது அமெரிக்கா."

ஆளுமையையும், அதிகாரத்தையும், சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டே இப்படிப்பட்ட மனித வதைகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இப்படி அன்றாடம் அரங்கேறி வரும் மனித வதைகளைக் கண்டு கொள்ளாதவர்கள் பசுவதையை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? பசுக்களை இந்துக்கள் புனிதமாகக் கருதுவதால் கொல்லக் கூடாது என்கிறார்களா? இஸ்லாமியர்கள் பசுக்களைக் கொன்று தின்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்களா? உயிர்களைக் கொள்வது பாவம்-உயிர் வதை பாவம் என்பதற்காக பசு வதையை எதிர்க்கிறார்களா?”

மகாராஷ்டிரா அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ள சூழலில் மேலும் விரிவாக - பாலும் பசுவதையும்! - மீள் பதிவு

Saturday, March 7, 2015

பெண்களின் பணிகள் நின்று போனால் ........

வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப்
பராமரித்தனர்கால் நடைகளில் பால் கறந்தனர்வயல்களில் உழவு வேலை
செய்தனர்துணிகளை வெளுத்தனர்ரொட்டி சுட்டனர்வீட்டைச் சுத்தம்
செய்தனர்துணிகளைத் தைத்தனர்நோயுற்றவர்களைப் பராமரித்தனர்,
மரணப்படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர்,
இறந்தவர்களைப் புதைத்தனர்பெண்களின் இந்த அரும் பணிகள் இன்றும்
உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன”  - ரோஸலிண்ட் மைல்ஸ்

பெண்களின் பணிகள் நின்று போனால் அடுப்பங்கரை மட்டுமல்ல இந்த அகிலமும் சேர்ந்தே இருண்டு போகும்.

தொடர்புடைய பதிவுகள்:
பெண் என்ன செய்தாள்? …………தொடர்-3