Wednesday, June 3, 2015

பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்கத்தூண்டும் பார்ப்பனர்கள்!

சமஸ்கிருத வாரம், இந்தி திணிப்பு, பகவத் கீதை தேசிய நூல், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை என தொடர் நடவடிக்கைகள் மூலம் பெரியாரையும் அம்பேத்கரையும் படி படி என நம்மைத் தூண்டும் பார்ப்பனர்களுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். பெரியாரையும் அம்பேத்கரையும் இனியும் படிக்காமல் இருப்பது பார்ப்பனர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். பார்ப்பனர்களுக்கு துரோகம் செய்யாதீர். பெரியார் அம்பேத்கர் நூல்களைத் தேடுங்கள்!.தேடுங்கள்!! தேடிப்பிடித்துப் படியுங்கள். பரப்புங்கள். 

பெரியாரையும் அம்பேத்கரையும் நாம் படித்துவிட்டால் அதன் பிறகு பார்ப்பனர்கள் ஓய்ந்து விடுவார்கள். பார்ப்பனியம் ஒழிக்கப்படும். சமூகத்தில் அமைதி நிலவும். இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனர்கள் மேற்கொள்ளும் மேற்கண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் சமூக அமைதிக்கானவையே. அதற்காக மீண்டும் ஒருமுறை பார்ப்பனர்களுக்கு நன்றி! நன்றி!!. 

குறிப்பு: இங்கே பார்ப்பனர் என்று குறிப்பது இந்து சாதிய அமைப்பு முறையை ஏற்றுக்கொண்டு அதை நியாயப்படுத்தும் அர்ஜீன் சம்பத் முதல் எச்.ராஜா வரை உள்ள சனாதனிகள் அனைவருக்கும் பொருந்தும்.

தொடர்புடைய பதிவு:

சாதியைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்கள்!

No comments:

Post a Comment