Friday, July 31, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 5

தீண்டாமையை கடைபிடிப்பதில் இஸ்லாமியர்களும் சளைத்தவர்களல்ல.


1934ம் ஆண்டு அம்பேத்கர் மற்றும் அவருடன் பணிபுரியும் தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 30 பேர் ஒரு சுற்றுலா செல்கின்றனர். அப்பொழுது தவுலாதாபாத் கோட்டையை பார்க்கச் சென்றபோது பயணக் களைப்பில் இருந்ததால் கோட்டைக்கு வெளியே இருந்த ஒரு குளத்தில் கை கால் கழுவினர். தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டதாக ஒரு முகமதியர் கூப்பாடு போட்டார். தெத்களுக்கு கர்வம் பிடித்தவிட்டது. தெத்கள் தங்களுடைய மதத்தை மறந்துவிட்டனர் என இளம் மற்றும் வயதான முகமதியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு அம்பேத்கரையும் அவரது நண்பர்களையும் வசை பாட ஆரம்பித்தனர்.

அவர்கள் தாக்கும் மனநிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் கோபக்கனலை உள்ளூர் தீண்டத்தகாதவர்கள் மீது வீசினார்கள். மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தனர். 

அதன் பிறகு தீண்டப்படாதவர்கள் உள்ளே எந்தத்தண்ணீரையும் தொட்டுவிடக்கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் ஆயுதங்தாங்கிய சிப்பாய் ஒருவன் பின்தொடர அம்பேத்கரும் அவரது நண்பர்களும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவன்தானே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துகாட்டுவதாக அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.

தாயையும் சேயையும் கொன்ற தீண்டாமை

கத்தியவார் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான ஒரு பள்ளி ஆசிரியர் பிரசவித்திருந்த தனது மனைவி மற்றும் குழந்தைக்கு மருத்துவம் செய்ய அணுகிய போது தீண்டத்தகாதவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது என மருத்துவர் ஒருவர் மறுத்துவிட்டார்.

கெஞ்சிக்கூத்தாடிய பிறகு மற்றொரு மருத்துவர் வர ஒப்புக்கொண்டாலும் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டார். அதனால் தனது மனைவியை பிறந்த குழந்தையுடன் குடியிருப்புக்கு வெளியே கொண்டு வந்தார். பிறகு மருத்துவர் ஒரு வெப்பமானியை ஒரு முஸ்லீமிடம் கொடுக்க, அதை அவர் ஆசியிரியடம் கொடுக்க, அதன் பிறகு அந்த ஆசிரியர் அதை தன் மனைவியிடம் கொடுத்தார். அதை உபயோகித்த பிறகு அதே முறையில் அது திரும்பக் கொடுக்கப்பட்டது. நோயாளிக்கு நிமோனியா ஜீரம் எனக்கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அவளைப் பார்க்க மறுத்தவிட்டார். மருத்துவம் கிடைக்காததால் அந்தப் பெண் இறந்து போனார்.

மருத்துவர் படித்தவராக இருந்தும் தொழில் ரீதியான நடத்தை நெறிகளை குழிதோண்டிப் புதைத்துவிட்ட அந்த மருத்துவருக்கு மனசாட்சி உறுத்தவில்லலை. ஓர் இந்து தீண்டத்தாகாதவனைத் தொடுவதைவிட மனிதாபிமானமற்று இருப்பதையே சிறந்ததாகக் கருதுகிறான்.

வீடு வாடகைக்கு விடும் போது ஜாதி கேட்பதே தீண்டத்தகாதவனா என்பதை அறிவதற்கே!

குஜராத்  ஆமதாபாத்திலுள்ள பிற்பட்டோர் துறை அலுவலகத்தில் கிராம பட்வாரி (தலாத்தி) வேலைக்கு 1938 ம் ஆண்டில் தேர்வு செய்ப்பட்ட தாழ்த்தப்பட்ட பங்கி சாதியைச் சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமையை அவரே விவரிக்கிறார்.

அலுவலக எழுத்தர்: ‘நீ யார்’?

‘ஐயா, நான் ஒரு ஹரிஜன்’

தூரப் போ! தள்ளி நில். இவ்வளவு அருகே நிற்க உனக்கு என்ன தைரியம்? இப்போது நீ அலுவலகத்தில் இருக்கிறாய். நீ வெளியே மட்டும் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன தைரியம்?’

தலாத்தி வேலைக்கான நியமனக் கடிதத்தையும் சான்றிதழ்களையும் தரையில் போடச் சொல்லி பிறகு அதை அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.

அலுவலகத்தில் ஒரு தகரக் குவளையில் குடி தண்ணீர் இருக்கும். தொட்டால் தீட்டாகிவிடும் என்பதால் அதைத் தொடுவதற்கு இந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் அனுமதிக்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஒரு பழைய அழுக்கான பானை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். குடிநீர் வழங்குபவர் இவர் குடிப்பதற்காக சிறிதளவு தண்ணீரை அந்தப் பானையில் ஊற்றி வைப்பார். ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர் ஊற்றுவது பிடிக்காததால் அவர் எங்கேயாவது நழுவி விடுவார். அப்பொழுதெல்லாம் இவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் திண்டாட வேண்டும்.

.அதே போல எந்தச் சாதி இந்துவும் இவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவில்ல. அதனால் 6 மைல் தொலைவில் உள்ள தன் மூதாதையர் கிராமத்திலிருந்து அன்றாடம் வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

இவருடைய தந்தை, அண்ணன் எல்லாம் அலுவலகத்தில் குப்பை கூட்டியவர்கள் இவர் மட்டும் எப்படி அலுவலக வேலை பார்க்கலாம் என்பதால் இவர் மீது வெறுப்பு காட்டினர். ஒரு முறை கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் நாற்காலியில் அது அவருடையது எனத் தெரியாமல் உட்கார்ந்ததற்காக “இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது?” என கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த மக்கள் வசைமாறி பொழிந்து கண்டதுண்டமாக வெட்டிவிடுவதாக இவரை மிரட்டினர். “இவ்வாறு மீண்டும் நடக்காது! நான் வேலையை விட்டுவிடுகிறேன்!” என இவர் இரக்கம் காட்டுமாறு கெஞ்சிக் கேட்ட பிறகுதான் அந்தக்கூட்டம் கலைந்தது. பிறகு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயிலுள்ள தன் பெற்றோரிடம் சென்றுவிட்டார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

“இன்று யார் சாதி பார்க்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்புவோர் ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்கு விடத்தயாரா?

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா?

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 5

தீண்டாமையை கடைபிடிப்பதில் இஸ்லாமியர்களும் சளைத்தவர்களல்ல.

1934ம் ஆண்டு அம்பேத்கர் மற்றும் அவருடன் பணிபுரியும் தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 30 பேர் ஒரு சுற்றுலா செல்கின்றனர். அப்பொழுது தவுலாதாபாத் கோட்டையை பார்க்கச் சென்றபோது பயணக் களைப்பில் இருந்ததால் கோட்டைக்கு வெளியே இருந்த ஒரு குளத்தில் கை கால் கழுவினர். தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டதாக ஒரு முகமதியர் கூப்பாடு போட்டார். தெத்களுக்கு கர்வம் பிடித்தவிட்டது. தெத்கள் தங்களுடைய மதத்தை மறந்துவிட்டனர் என இளம் மற்றும் வயதான முகமதியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு அம்பேத்கரையும் அவரது நண்பர்களையும் வசை பாட ஆரம்பித்தனர்.

அவர்கள் தாக்கும் மனநிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் கோபக்கனலை உள்ளூர் தீண்டத்தகாதவர்கள் மீது வீசினார்கள். மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தனர். 

அதன் பிறகு தீண்டப்படாதவர்கள் உள்ளே எந்தத்தண்ணீரையும் தொட்டுவிடக்கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் ஆயுதங்தாங்கிய சிப்பாய் ஒருவன் பின்தொடர அம்பேத்கரும் அவரது நண்பர்களும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவன்தானே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துகாட்டுவதாக அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.

தாயையும் சேயையும் கொன்ற தீண்டாமை

கத்தியவார் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான ஒரு பள்ளி ஆசிரியர் பிரசவித்திருந்த தனது மனைவி மற்றும் குழந்தைக்கு மருத்துவம் செய்ய அணுகிய போது தீண்டத்தகாதவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது என மருத்துவர் ஒருவர் மறுத்துவிட்டார்.

கெஞ்சிக்கூத்தாடிய பிறகு மற்றொரு மருத்துவர் வர ஒப்புக்கொண்டாலும் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டார். அதனால் தனது மனைவியை பிறந்த குழந்தையுடன் குடியிருப்புக்கு வெளியே கொண்டு வந்தார். பிறகு மருத்துவர் ஒரு வெப்பமானியை ஒரு முஸ்லீமிடம் கொடுக்க, அதை அவர் ஆசியிரியடம் கொடுக்க, அதன் பிறகு அந்த ஆசிரியர் அதை தன் மனைவியிடம் கொடுத்தார். அதை உபயோகித்த பிறகு அதே முறையில் அது திரும்பக் கொடுக்கப்பட்டது. நோயாளிக்கு நிமோனியா ஜீரம் எனக்கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அவளைப் பார்க்க மறுத்தவிட்டார். மருத்துவம் கிடைக்காததால் அந்தப் பெண் இறந்து போனார்.

மருத்துவர் படித்தவராக இருந்தும் தொழில் ரீதியான நடத்தை நெறிகளை குழிதோண்டிப் புதைத்துவிட்ட அந்த மருத்துவருக்கு மனசாட்சி உறுத்தவில்லலை. ஓர் இந்து தீண்டத்தாகாதவனைத் தொடுவதைவிட மனிதாபிமானமற்று இருப்பதையே சிறந்ததாகக் கருதுகிறான்.

வீடு வாடகைக்கு விடும் போது ஜாதி கேட்பதே தீண்டத்தகாதவனா என்பதை அறிவதற்கே!

குஜராத்  ஆமதாபாத்திலுள்ள பிற்பட்டோர் துறை அலுவலகத்தில் கிராம பட்வாரி (தலாத்தி) வேலைக்கு 1938 ம் ஆண்டில் தேர்வு செய்ப்பட்ட தாழ்த்தப்பட்ட பங்கி சாதியைச் சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமையை அவரே விவரிக்கிறார்.

அலுவலக எழுத்தர்: ‘நீ யார்’?

‘ஐயா, நான் ஒரு ஹரிஜன்’

தூரப் போ! தள்ளி நில். இவ்வளவு அருகே நிற்க உனக்கு என்ன தைரியம்? இப்போது நீ அலுவலகத்தில் இருக்கிறாய். நீ வெளியே மட்டும் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன தைரியம்?’

தலாத்தி வேலைக்கான நியமனக் கடிதத்தையும் சான்றிதழ்களையும் தரையில் போடச் சொல்லி பிறகு அதை அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.

அலுவலகத்தில் ஒரு தகரக் குவளையில் குடி தண்ணீர் இருக்கும். தொட்டால் தீட்டாகிவிடும் என்பதால் அதைத் தொடுவதற்கு இந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் அனுமதிக்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஒரு பழைய அழுக்கான பானை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். குடிநீர் வழங்குபவர் இவர் குடிப்பதற்காக சிறிதளவு தண்ணீரை அந்தப் பானையில் ஊற்றி வைப்பார். ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர் ஊற்றுவது பிடிக்காததால் அவர் எங்கேயாவது நழுவி விடுவார். அப்பொழுதெல்லாம் இவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் திண்டாட வேண்டும்.

.அதே போல எந்தச் சாதி இந்துவும் இவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவில்ல. அதனால் 6 மைல் தொலைவில் உள்ள தன் மூதாதையர் கிராமத்திலிருந்து அன்றாடம் வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

இவருடைய தந்தை, அண்ணன் எல்லாம் அலுவலகத்தில் குப்பை கூட்டியவர்கள் இவர் மட்டும் எப்படி அலுவலக வேலை பார்க்கலாம் என்பதால் இவர் மீது வெறுப்பு காட்டினர். ஒரு முறை கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் நாற்காலியில் அது அவருடையது எனத் தெரியாமல் உட்கார்ந்ததற்காக “இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது?” என கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த மக்கள் வசைமாறி பொழிந்து கண்டதுண்டமாக வெட்டிவிடுவதாக இவரை மிரட்டினர். “இவ்வாறு மீண்டும் நடக்காது! நான் வேலையை விட்டுவிடுகிறேன்!” என இவர் இரக்கம் காட்டுமாறு கெஞ்சிக் கேட்ட பிறகுதான் அந்தக்கூட்டம் கலைந்தது. பிறகு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயிலுள்ள தன் பெற்றோரிடம் சென்றுவிட்டார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

“இன்று யார் சாதி பார்க்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்புவோர் ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்கு விடத்தயாரா?

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

Saturday, July 25, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

பார்சிக்களால் நேர்ந்த தீண்டாமை…..
அம்பேத்கர் 1913லிருந்து 1917 வரை நியூயார்க்கில் படித்துவிட்டு லண்டன் சென்கிறார். 1918ல் லண்டனில் படிப்பை முடிக்க முடியாமல் இந்தியா திரும்புகிறார். இந்தியா வந்த பிறகு அவருக்கு பரோடாவில் வேலை கிடைக்கிறது. பரோடாவில் எங்கு தங்குவது என்கிற பிரச்சனையை சந்திக்கிறார். விஷிஸ் என்ற இந்து ஓட்டலில் தங்க வேண்டுமானால் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டும். அதை அவர் விரும்பவில்லை. இந்து நண்பர்கள் வீட்டிற்குச் சென்று தங்கலாம் என்றால் அது அவர்களுக்கு தர்மசங்கடமாகிவிடும். அதனால் ஒரு பார்சி விடுதியில் தங்குகிறார். அம்பேத்கர் ஒரு தாழ்த்தப்பட்ட இந்து என்பதால் அவர் பார்சி விடுதியை அசுத்தப்படுத்திவிட்டதாகக் கூறி ஒரு டஜன் பார்சிக்கள் கையில் கம்புகளுடன் வந்து அம்பேத்கரை மிரட்டி காலி செய்ய வைக்கின்றனர்.

எங்கு செல்வது என்று தெரியாமல் தனது கிறிஸ்தவ நண்பரிடம் உதவி கேட்கிறார். அவரது மனைவி பிராமணர் என்பதால் தனது வீட்டில் தங்கவைப்பதற்கு அந்த கிறிஸ்தவ நண்பா் தயங்கியதால் மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து வெளியேறி கமாதி பாக் பூங்காவில் 5 மணி நேரம் கழித்தவிட்டு இரவு 9 மணி ரயிலில் பம்பாய் செல்கிறார். தீண்டாமையின் கொடுமையால் 11 நாட்கள்தான் அவர் பரோடாவில் வேலை பார்க்க முடிந்தது.

“ஒரு டஜன் பார்சிக்கள் அச்சுறுத்தும் விதத்தில் கையில் கம்புகளுடன் என் முன்னே வரிசையாக நிற்க, மன்னிப்பு கேட்டு பீதி நிறைந்த பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்ற காட்சி 18 ஆண்டகள் கடந்த பின்பும் சிறிதும் மங்கவில்லை. அதைத் தெளிவாக என் மனக்கண் முன் கொண்டு வர முடியும். ஆனால் கண்ணில் கண்ணீா் இல்லாமல் மட்டும் அதை நினைவு கூற முடியாது. .இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால், அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்” என தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமையை வேதனையோடு பதிவு செய்கிறார்.

பாரிஸ்டரையும் துரத்தும் தீண்டாமை!
1929 ஆம் ஆண்டு தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, கொடுமை, கொடூரம் குறித்து விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த குழுவில் அம்பேத்கரும் ஒரு உறுப்பினர். விசாரணைக்காக மகர்வாடா ரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சாலிஸ்காவோன் செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் இருந்த டோங்கோவாலாக்கல் யாரும் தீண்டத்தகாதவர்களை வண்டியில் ஏற்றிச் செல்ல தயாரில்லை. எனவே வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்த சாலிஸ்காவோன் தாழ்த்தப்பட்டவர்கள், அனுபவமில்லாத தங்களில் ஒருவரைக் கொண்டு வண்டியை ஓட்ட, அது விபத்துக்குள்ளாகி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பல நாட்கள் நடக்க முடியாமல் இருந்துள்ளார் அம்பேத்கர்.

”ஓர் இந்து டோங்கோவாலா, ஒரு கடைநிலை வேலைக்காரனைப் போன்ற நிலையில் இருந்தாலும், தான் எல்லா தீண்டத்தகாதவர்களையும்விட, ஏன் பாரிஸ்டரையும் விடக்கூட உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன் என்பதை உணர்ந்து கொண்டேன்!” என அம்பேத்கர் தீண்டாமையின் அவலத்தை தோலுரிக்காட்டுகிறார்.
(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

இன்று வடிவம் வேறாக இருந்தாலும் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைகோடி நிலையில் இருக்கும் சாதி இந்துக்கள் தன்னைவிட உயர் பதவியில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டாமை எண்ணத்துடன்தான் அணுகுகின்றனர்.

“நீயெல்லாம் என்னை கேள்வி கேட்கிறயா?” என பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளே ஆன முதலியார் சாதியைச் சேர்ந்த ஒரு கடைநிலை பெண் ஊழியர், தன்னைவிட உயர் பதவி வகிக்கும் முப்பது ஆண்டுகாலம் பணி அனுபவம் உள்ள பறையர் சாதியைச் சேர்ந்த ஆண் ஊழியர் ஒருவரைப் பார்த்து கேள்வி எழுப்பிய சம்பவம் சமீபத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் நடந்துள்ளது.

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...

Wednesday, July 22, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

சண்டாளர்கள் பறையர்கள்தான் என்பதை உறுதி செய்யும் வகையில் பறையன் என்ற சொல் மனுஸ்மிருதி தமிழ் மொழி பெயர்ப்பில் இரண்டு இடங்களில்  வருகிறது. (மனு:4:85,86). தீண்டப்படாதவர்கள் அனைவருமே இந்தச் சண்டாளர் என்கிற பட்டியலுக்குள் அடங்கிவிடுகிறார்கள்.

மிக அருவருக்கத்தக்க கழிவுகளை அப்புறப்படுத்திக் கொண்டும், பலதரப்பட்டவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டும், அவர்களின் வீட்டு வாசலில் நின்று உணவு பெறுவதும், தூரத்தில் நின்று கடைகளில் மளிகை சாமான் வாங்குவதும், யாரையும் தீண்டாமலும், யாராலும் தீட்டுப்படாமலும் வாழ்வதுதானே தீண்டப்படாதவனின் நிலை. இத்தகைய ஒரு ஊரை அவன் எப்படி தனது ஊராகக் கருத முடியும் என கேள்வி எழுப்பி தீண்டாமையின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டுகிறார் அம்பேத்கர்.

தனது சொந்த அனுபவத்திலிருந்தும் பிறரது அனுபவங்களிலிருந்தும் தீண்டாமை குறித்த அவரது பதிவுகளில் சில….

வண்டியிலும் தீண்டாமை…

1901 வாக்கில் கோடை விடுமுறையைக் கழிக்க கோரேகானுக்குச் சென்ற போது இவர்கள் தீண்டப்படாத மஹர்கள் (சண்டாளர்கள்) என்பதை அறிந்த மாசூர் ரயில் நிலைய அதிகாரி இவர்கள் மீது காட்டிய அருவருப்பையும், மஹர்களை ஏற்றிச் சென்றால் இழிவாகிவிடும் என்பதற்காக மாசூரிலிருந்து கோரேகானுக்குச் செல்ல வண்டி ஓட்டிகள் வர மறுத்ததையும், நள்ளிரவில் சுங்கச் சாவடியில் தங்கியபோது இவர்கள் மஹர்கள் என்பதால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காததையும் அம்பேத்கர் மிக வேதனையோடு பதிவு செய்துள்ளார்.

தென்ஆப்ரிக்காவில் வண்டியில் பயணம் செய்த போது காந்தியை இழிவுபடுத்தியதற்காக வெள்ளைக்காரன் மிது வருகிற  கோபம் அம்பேத்கரை இழிவுபடுத்திய சாதி இந்துக்கள் மீது வராமல் போனது ஏன்?

வகுப்பறையில் தீண்டாமை….

அம்பேத்கருக்கு வயது ஒன்பது. பள்ளி வகுப்பறையில் தகுதி வரிசைப்படி இவர் உட்கார வைக்கப்படவில்லை. இவர் உட்காருவதற்கு என தனி சாக்குப்பை ஒன்று இருக்கும். பள்ளியை சுத்தம் செய்யும் வேலையாள்கூட இந்த சாக்குப்பையை தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்பதால் அதை தொடமாட்டானாம்.

அதே போல குடிநீர்க் குழாயைத் தொடமுடியாது. பள்ளிக்கூட பணியாள் குழாயைத் திறந்தால்தான் இவருக்குத் தண்ணீர் கிடைக்கும். பணியாள் இல்லை என்றால் தண்ணீரும் இல்லை.

முடியில்கூட தீண்டாமை…..

சலவையாளர்களுக்குப் பணம் கொடுக்க இவர்களுக்கு வசதி இருந்தாலும் தீண்டத்தகாதவர்களின் துணிகளை சலவை செய்ய சலவையாளர் எவரும் முன்வரவில்லை. இவரது மூத்த சகோதரிதான் இவரது துணிகளைத் துவைத்துக் கொடுத்துள்ளார். அதே போல முடிதிருத்தும் தொழிலாளிகளும் இவருக்கு முடிதிருத்த முன்வராததால் இவரது மூத்த சகோதரியே இவருக்கு  முடிவெட்டுகிற வேலையையும், சவரம் செய்கிற வேலையையும் செய்துள்ளார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

தொடரும்.

தொடர்புடைய பதிவுகள்:


தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்...

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்...

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...