Monday, February 8, 2016

சீக்காளியும் லேகியக்காரனும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. திராவிடம் - தமிழியம் - தேசியம் - சாதியம் என வித விதமான லேகியங்களை கிண்டத் தொடங்கிவிட்டனர். 

இலையில் மை தடவி மயக்கும் காரிகை ஒருத்தி 'என் பச்சிலை லேகியத்துக்கு ஈடு இணை ஏது?' என எக்காளத்துடன் இருமாந்து இருக்கிறாள். இவள் மென்று துப்பும் எச்சத்தைக் கவ்வ சிலர் நாய் போல காத்துக் கிடக்கின்றனர்.

ஏற்கனவே லேகியத்தைக் கிண்டி  கண்ணாடிக்  குடுவையில் போட்டு வெயிலில் வைத்து 'லேகியம் கைகூடுமா!' என சூரியனையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு இளம் காளை.

இவர்கள் இருவரும் மொத்த வியாபாரிகள் என்பதால் தனியாக கடைவிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். 

அவர்களில்...

மஞ்சள் சட்டைக்காரன் தனியாக 'மாங்கனி' லேகியம் கிண்ட முயற்சிக்கிறான். ஆளாளுக்கு கூவினால் கூட்டம் கலைந்து விடுமோ என இவன் எண்ணினானோ என்னவோ ஒருவனை மட்டுமே லேகியம் விற்க நியமித்துள்ளான். இவன் கிண்டும் லேகியத்தை இவன் வீட்டில் உள்ளவனே வாங்குவானா என்பதுகூட தெரியாமலேயே இவன் கடைவிரித்திருக்கிறான் பாவம்!

மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கே எடுபடாது என உணர்ந்த காவி வேட்டிக்காரன், 'கேனவாயன் எவனாவது கிடைக்கமாட்டானா!' என அலைந்து கொண்டிருக்கிறான். எவனும் கிடைக்கவில்லை எனில் இவன் முதலுக்கு மோசம்தான். 

நீலச்சட்டையும்,  சிவப்புச் சட்டைகளும், பட்டா பட்டியோடு சேர்ந்து ஊர் ஊராய் லேகியம் விற்கத் தொடங்கி விட்டனர். சீக்காளிகள் பெருத்த நாடல்லவா இது! லேகியம் என்றால் கூட்டம் கூடத்தானே செய்யும். ஆனால் வேடிக்கை பார்ப்பவன் எல்லாம் லேகியம் வாங்குவானா என்பதைக்கூட அறியாமலேயே இப்பொழுதே கல்லாப் பெட்டி நிறைந்து விட்டதாக எண்ணி குதூகலிக்கத் தொடங்கிட்டனர் இவர்கள்.

போன முறை காரிகையோடு சேர்ந்து லேகியம் விற்றதில் கேப்டனுக்கு கொஞ்சம் சில்லரை சேர்ந்தது. சில சேல்ஸ்மேன்கள் கல்லாப் பெட்டியை லவட்டிக் கொண்டு இவரை விட்டு ஆத்தா வீட்டுக்கே ஓட்டம் பிடித்ததால் இம்முறை கடைவிரிப்பது பற்றி சேல்மேன்களோடு இன்னமும் ஆலோசித்து வருகிறார். 

அகில இந்திய அளவில் லேகியம் விற்பவர்களுக்கு இங்கே காலனாகூட பேறாது என்பதால் ஏதாவது ஒரு கடையில் லேகியம் மடிக்கவாவது வாய்ப்பு கிடைக்குமா என 'கை' ஏந்தி நிற்கின்றனர்.

முதல் போட வாய்ப்பில்லாத பலர் சில்லரை விற்பனைக்காக முண்டியடிக்கின்றனர். 

லேகியங்களுக்கான லேபில்கள் பல வண்ணங்களில் தயாராகிவிட்டன. 

சந்துக்கு சந்து - தெருவுக்கு தெரு - ஊருக்கு ஊரு என முச்சந்திகளில் லேகியக்காரர்கள் கடைவிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த லேகியக் கடைகள் திறந்திருக்கும் என்பதால் முச்சந்திகளில் கூட்டம் அலைமோதுகிறது. 

ஆசை காட்டியும், அச்சமூட்டியும் எப்படியாவது லேகியத்தை நம் தலையில் தலையில் கட்டுவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். எச்சரிக்கை!

சீக்காளிகள் இருக்கும் வரை லேகியக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்.


தொடர்படைய பதிவுகள்:

டம்மி பீசு!
தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

2 comments:

  1. யாழ் கரையான்Thursday, April 14, 2016 at 8:25:00 AM PDT

    நல்ல பகிடியா எழுதியிருக்கிறியள், மேலும் நய்யாண்டி பதிவுகள் போடவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி! முயற்சிக்கிறேன்.

      Delete