Thursday, September 14, 2017

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி! தொடர்-2

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?

மனிதன் கடவுளின் அடிமைதானே! அப்படிதானே மக்கள் கருதுகிறார்கள். எனவேதான் மக்கள் கடவுளை சாமி என்று அழைப்பதோடு கடவுளை தெண்டனிட்டு வணங்கவும் செய்கிறார்கள்.  ஆனால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை சாமி என்று அழைத்தால் அதற்கு என்ன பொருள்? அவனை வணங்குவதாகத்தான் பொருள்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை சாமி என்றுதான் மக்கள் விளித்தனர்; விளித்ததோடு வணங்கவும் செய்தனர். இன்றும்கூட பார்ப்பனர்களை சாமி என்று விளிப்பதும் வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது.

இந்து மதத்தைப் பொருத்தவரை இந்து மதக் கடவுளர்களை ஒருவன் வணங்குகிறான் என்றால் அவன் இந்து மத வேதங்களை வணங்குகிறான் என்று பொருள்.

மனிதர்களில் வேதம் ஓதும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் (மனு: 1:97) என மனு விதி வகுத்ததால் பார்ப்பனர்களை வணங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பார்ப்பனர்களை வணங்காமை என்பது வேதத்தை மதிக்காததற்கு ஒப்பாகும். வேதங்களை மதிக்கவில்லை என்றால் கடவுளையே மறுப்பதாகும். அதனால்தான் கடவுளுக்கு கொடுக்கிற மரியாதையை வேதங்களும், வேதங்களுக்கு கொடுக்கும் மரியாதையை வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டது.

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன? அவர்களை சாமி என்று அழைப்பதோடு நிற்கவில்லை. நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சி நீடிக்க வேண்டும் எனில் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும்; நீதி செலுத்த வேண்டும். (மனு: 7-38).

நியாயம் எது என்று ஆட்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அந்த நியாயத்தை பார்ப்பனர்களிடத்தில்தான் அவர்கள் வணங்கிக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அவர்கள் ஆட்சியை இழக்கமாட்டார்கள். (மனு:7-39). அப்படிக் கேட்பதால்தான் இன்னமும் எடப்பாடி அரசு நீடிக்கிறதோ!.

பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்கள் அரசை இழப்பார்கள். (மனு: 7-40). பார்ப்பனர்களை வணங்காததால்தான் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி போன்ற அரசர்கள் அழிந்து போனார்கள். (மனு:7-41).

பார்ப்பனர்களை எதிர்ப்பதால்தான் சூத்திரர்கள் ஆட்சிக்கு வந்தால் அதை அழிப்பதற்கும்; ஆட்சிக்கு வர முயன்றால் வரவிடாமல் தடுப்பதற்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார்கள். இன்றை தமிழக அரசியல் இதற்குப் பொருந்துகிறதோ!

குடி-கும்மாளம், பாட்டு-கூத்து, துரோகம்-பொறாமை, பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தல், குடி-கூத்தி என ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால் அவர்கள், நீதி சாஸ்திரம், வேதாந்தம், தநுர் வேதம் இவைகளையறிந்தவர்களை (பார்ப்பனர்களை) ஆலோசனை சொல்வதற்கு வைத்துக் கொள்ள வேண்டியது. (மனு: 7-47 முதல் 54 வரை).

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) சண்டை-சச்சரவுகள்-சமாதானம் குறித்து ஆலோசிக்க வேண்டியது. (மனு: 7-56)

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) தினந்தோறும் நம்பிக்கையுடன் சகலத்தையுஞ்சொல்லி அவருடன் யோசித்து ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டியது. (மனு: 7-59)

ஈ.பி.எசும்-ஓ.பி.எசும் முட்டி மோதிக் கொண்டதும், இன்று சமாதானம் ஆனதும், இந்த எடுபிடிகளின் ஆட்சி நீடிப்பதும், தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் நீடிப்பதும், கிரிஜா உள்துறைச் செயலாளர் ஆனதும் தற்செயலானதோ!

மேட்டூர் அணை இந்த ஆண்டாவது நிரம்பாதா, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்து விடுவார்களா என ஏக்கத்தோடு காத்திருக்கும் வேளையில்தான் மகா புஷ்கரத்தையொட்டி பார்ப்பனர்கள் தங்களின் அழுக்கைக் கழுவ மேட்டூரிலிருந்து விநாடிக்கு 10000 கன அடி தண்ணீரை ஒரு வாரத்திற்கு தமிழக அரசு திறந்து விடுகிறது என்றால் இந்த அரசு யாருடைய ஆலோசனைப்படி, யாருக்காக செயல்படுகிறது என்பதை என்னவென்பது?


யாருக்காக இந்த மகா புஷ்கர விழா?

பார்ப்பனர்களின் ஆலோசனை இல்லாமலா  நீட் தேர்வு, ஹைரோ கார்பன் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் உள்ளிட்ட பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு தமிழக எடுபிடி அரசு ஒப்புதல் கொடுத்தது? 

பார்ப்பனர்களை வணங்கவில்லை எனில்….

பார்ப்பனர்களை வணங்காத காரணத்தினால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம்  ஆசிய நாடுகளை ஆண்ட சத்திரியர்கள் எல்லாம் சூத்திர நிலைக்கு தள்ளப்பட்டார்கள். (மனு: 10-43 & 44).

அரசனே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு சாமான்ய சூத்திர மக்களுக்கு கல்வி கிடைத்திருக்குமா? அடுத்த தொடரில் பார்க்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்:

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

Monday, September 11, 2017

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொதுமறையை ஒரு தமிழனால் படைக்க முடிந்தது. தமிழனின் பண்பாட்டை பறை சாற்றும் சங்க இலக்கியங்களை வடிக்க முடிந்தது. அதன் பிறகு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படியான இலக்கியங்கள் தமிழனால் ஏன் படைக்க முடியவில்லை?

இடைப்பட்ட காலத்தில் குறிப்பாக ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி காலத்தில், தமிழனை, கடவுளின் பித்தனாக்கிய பக்தி இலக்கியங்களும், இதிகாச புராணக் குப்பைகளுமே புகுத்தப்பட்டன. மக்களைப் பற்றி பாட்டெழுதியவர்கள் எல்லாம் மகான்களைப் பற்றி மட்டுமே எழுத பணிக்கப்பட்டனர்.

இத்தகைய பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிய; பார்ப்பனர்களின் ஆலோசனைகளையும் – வேதங்களையும் ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக அன்றைய ஆளும் தமிழ் மன்னர்கள் எல்லாம் சூத்திரர்களாக்கப்பட்டனர். மன்னர்களே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு மக்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்?

இன்றைய எடப்பாடி அரசு போல அன்றும் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து தங்களது எடுபிடிகளின் ஆட்சியை நிறுவிக் கொண்டு, இன்று நீட் தேர்வை புகுத்தி சாமான்ய மக்களின் கல்வியை பறிப்பது போல அன்று சூத்திரர்கள் கல்வியே பயிலக்கூடாது என பார்ப்னர்கள் சட்டம் வகுத்தனர்.

சூத்திரன் கல்வி கற்றால் அவன் நாக்கை அறுத்தெறி; காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சட்டம் இயற்றி அன்று நமது மூதாதையரின் கல்வி உரிமையைப் பறித்தனர். இன்று நீட் எனும் பார்ப்பன பயங்கரவாத ஆயுதத்தைக் கொண்டு அனிதாவின் கல்வி உரிமையை பறித்ததோடு அவரை கொன்றொழித்தனர். நீட்டுக்கு பாட்டை போடும் எடப்பாடிகள் நீடிக்கும் வரை இந்தப் படுகொலை அனிதாவோடு நிற்கப் போவதில்லை.

இன்று நீட்டுக்கு எதிராக போராடுவோரை தேசத்துரோகிகள் என் முத்திரை குத்துகின்றனர். அன்று பார்ப்பன மனு நீதிக்கு எதிராக போராடியோரை அசுரர்கள் என முத்திரை குத்தினர்.

காலங்கள்தான் உருண்டோடியிருக்கின்றன. ஆனால் தர்மம் என்னவோ மனு காலத்தில்தான் நிற்கின்றன.

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா என்பது குறித்து அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும் …..

தொடர்புடைய பதிவகள்:

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2


*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

Thursday, September 7, 2017

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஜவார்கி அருகே சன்னூர் என்கிற குக்கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்கிறார்கள் என்பதற்காக அந்தக் கிணற்றில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து கிணற்று நீரை நஞ்சாக்கியிருக்கிறார்கள் இந்து மத கவுடா சாதி வெறியர்கள். 
இத்தகையை இந்து மதவெறிக் கொடுங்கோண்மைக்கு எதிராக துணிச்சலாக, ஒரு பெண்மணி, அதுவும் தன்னந்தனியாய் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொடூரமாக - கோழைத்தனமாக படுகொலை செய்துள்ளது ஆர்.எஸ்.எஸின் இந்து மதவெறிக் கும்பல். 
கவுரி லங்கேஷ்
'கோழையே..!'
என்னிடம் தோட்டாக்கள்
என்னிடம் அழியா வார்த்தைகள்
எதற்கும் அஞ்ச மாட்டேன்.
நான் கவுரி லங்கேஷ்'
இதுதான் இந்து மதவெறிக் கோழைகளுக்கு அவர் விட்டுச் சென்ற வீரஞ்செறிந்த போர் முழக்கம்.
இந்து மதம் இருக்கின்றவரை சமூக ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கவே செய்யும். ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் வரை கவுரி லங்கேஷ்க்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டுமனால் இந்து மதத்தை அழித்தாக வேண்டும். இந்து மதத்தை அழிக்க கவுரி லங்கேஷ்களாய், நரேந்திர தபோல்கர்களாய், கோதவிந்த் பன்சாரேக்களாய், எம்.எம்.கல்புர்கிகளாய் உருவெடுப்போம்! 
பெரியாரும், அம்பேத்கரும் காட்டிய வழியில் பார்ப்பன பாசிச இந்து மதவெறிக் கும்பலுக்கு சவக்குழி தோண்ட அணியமாவோம்! 
தொடர்புடைய பதிவுகள்:
நேற்று நான் கல்புர்கி... இன்று நான் கவுரி லங்கேஷ்!

எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டேன்: கவுரி லங்கேஷின் நண்பர் வேதனை

கர்நாடகாவில் தலித் மக்களின் குடிநீர் கிணற்றில் விஷம் கலப்பு: 3 பேர் கைது

Friday, September 1, 2017

நீட் தேர்வு: அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்!

ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவைக் கொன்று விட்டார்கள்.

நீட் தேர்வை கட்டாயமாக்கி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய பிரதமர் உள்ளிட்ட காவிக்கூட்டம் முழுவதும் கொலைக் குற்றவாளிகளே! 

இந்தக் காவிக் குற்றவாளிகளின் குற்றச் செயலுக்கு உதவி செய்த உச்சிக்குடுமி மன்றமும் குற்றவாளியே!

காவிகளின் காலை நக்கிக் கொண்டு குற்றச் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ், உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட ஒட்டுண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்த அனைவரும் குற்றவாளிகளே! 

ஜெயலலிதா என்கிற ஒரு கிரிமினல் குற்றவாளியை கொஞ்சமும் கூச்சமின்றி செத்த பிறகும் 'இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா' என கூப்பாடு போடும் ஒரு கூட்டத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

பல லட்சக் கணக்கில் தொண்டர்களைக் கொண்ட - அதுவும் சமூக நீதிக்கு பேர் போன தமிழக அரசியல் கட்சிகள் நீட்டுக்குப் பாடை கட்டத் தவறியது நமக்கெல்லாம் தலைகுனிவில்லையா?

காவிக்கூட்டததையும், காவிகளின் அடிவருடிகளான 'அம்மா' கூட்டத்தையும் தமிழகத்திலிருந்து கருவறுக்காமல் அனிதாக்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு ஒரே வழி தமிழகம் மீண்டும் மெரினாவாகவேண்டும்.